ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி போல் வேறெந்தக் கட்சியும் செயல்படுமா..? – அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

பஞ்சாப் ஆம் ஆத்மி அமைச்சரின் ஊழலை ஊடகங்களும், எதிர்க்கட்சியும் அறியாத போதும் அவரைப் பதவியில் இருந்து நீக்கியதாக ஆம் ஆத்மிக் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரசின் திட்டப் பணிகளுக்கு ஒப்பந்தக்காரர்களிடம் ஒரு விழுக்காடு கமிசன் கேட்ட விஜய் சிங்லா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அரியானாவின் குருசேத்திரத்தில் ஆம் ஆத்மிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இதைச் சுட்டிக்காட்டி, வேறெந்தக் கட்சியும் இவ்வாறு செய்யுமா? என வினவினார்.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் 7 ஆண்டுகளாகத் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.