ஓசூரில் தொழிலதிபரை கத்தி முனையில் கடத்தி 10 லட்ச ரூபாய் பறித்த 3 பேர் கைது.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிலதிபரை கத்தி முனையில் கடத்தி 10 லட்ச ரூபாய் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அஞ்செட்டியை சேர்ந்த வெங்கோப ராவ் என்பவரை கடந்த 9ஆம் தேதி ரியல் எஸ்டேட் இடம் காண்பிப்பதாக கூறி அழைத்துச் சென்ற 3 பேர் வனப் பகுதி அருகே கத்தியைக் காட்டி மிரட்டி 10 லட்ச ரூபாய் பறித்ததாக கூறப்படுகிறது.

உயிர்பயத்தால் வெங்கோபராவ் தாமதமாக புகார் அளித்த நிலையில், சம்பவம் தொடர்பாக அஞ்செட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.