கோழி தீவன அரவை இயந்திரத்தில் சிக்கி சூப்பர்வைசர் பரிதாப மரணம்| Dinamalar

ஷிவமொகா : கோழி தீவன இயந்திரத்தில் சிக்கி சூப்பர் வைசர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திருனருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சக தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஷிவமொகாவின் பத்ராவதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 35. இவர் லோயர் ஹுத்தா என்ற இடத்தில் உள்ள தனியார் கோழி தீவன தயாரிப்பு தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.நேற்று வழக்கம் போல பணிக்கு சென்றிருந்தார்.

அரவை இயந்திரம் அருகில் நின்று தீவனங்களை பரிசோதித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் மாட்டி கொண்டார். அருகில் இருந்த தொழிலாளர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போகவே, உயிரிழந்தார். இவர் சமீபத்தில்தான் பணிக்கு சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.உயிரிழந்த சூப்பர்வைசர் குடும்பத்துக்கு நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். பத்ரவாதி நியு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.