சர்ச்சில் கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 31 பேர் பலி!

சர்ச்சில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் முக்கியமானது நைஜீரியா. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான
நைஜீரியா
, பல்வேறு வளங்களைக் கொண்டிருந்த போதிலும், அது ஏழை நாடாகவே நீடிக்கிறது. இந்நிலையில் தென் கிழக்கே உள்ள போர்ட் ஹர்கோர்ட் நகரில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் என பரவிய தகவலை தொடர்ந்து, சிறிய வாசல் வழியே அனைவரும் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது,
கூட்ட நெரிசல்
ஏற்பட்டு பலர் சிக்கிக் கொண்டனர். அவர்களில் பலர் சிறுவர், சிறுமிகள் ஆவர்.

பறக்கும் விமானத்தில் செக்ஸ் – பயிற்சி பெண்ணுடன் விமானி உல்லாசம்!

இது தொடர்பாக, மாகாண போலீசின் பெண் செய்தி தொடர்பாளர் இரிங்கே-கோகோ கூறியதாவது:

கூட்ட நெரிசல் ஏற்படும் போது, உணவு வழங்கும் திட்டம் தொடங்கவில்லை. கதவு மூடப்பட்டு இருந்த போதிலும், நிகழ்ச்சி நடந்த பகுதியில் கூட்டத்தினர் கட்டுக் கடங்காமல் புகுந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.