பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் போபண்ணா ஜோடி..!

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ்நகரில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- மேத்வி மிட்டெல்கூப் (நெதர்லாந்து) ஜோடி 6-7 (5-7), 7-6(7-3), 7-6 (12-10) என்ற செட் கணக்கில் விம்பிள்டன் சாம்பியனான குரோஷியாவின் மேட்பவிச்- நிகோல் மெக்டிச் இணைக்கு அதிர்ச்சிஅளித்து கால்இறுதிக்குள் நுழைந்தது.

எதிராளிகளின் 5 ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்துதற்காத்து கொண்ட போபண்ணா- மிட்டெல்கூப் ஜோடி இந்த வெற்றிக்காக 2 மணி 32 நிமிடங்கள் போராடியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.