மன்சூரலிகானிடம் ரூ. 50 லட்சம் மோசடி

சினிமாவில் ஹீரோ, வில்லன், கேரக்டர் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வரும் மன்சூரலிகான் அவ்வப்போது இயக்குனர், தயாரிப்பாளர் என்றும் அவதரிப்பார். மேலும், எப்போது தேர்தல் வந்தாலும் அப்போது ஏதாவது ஒரு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர், பல தேர்தல்களில் சுயேட்சையாகவும் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார். இந்தநிலையில், தன்னிடம் நிலம் வாங்கித்தருவதாக சொல்லி வாசைக்கனி என்ற நபர் ரூ. 50 லட்சம் வாங்கி அதை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ள மன்சூரலிகான், அந்த பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.