முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி

சென்னை:
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பாமகவின் புதிய தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ் பெற்றார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 2026-ம் ஆண்டு வரவிருக்கிற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கும் சேர்த்து பா.ம.க முழு வேகத்துடன் தயாராகிவருகிறது. அதற்கான பணிகளும் முழுமூச்சுடன் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், பா.ம.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார்.

இந்த நிலையில் அன்புமணி தற்போது பா.ம.க-வின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த
பாமகவின் புதிய தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.