மேடையில் பாடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர்.!

கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நேற்று இரவு ஆலப்புழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய இந்தி பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 78 வயதான எடவா பஷீரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.