ராமநாதபுரம் : கிரிக்கெட் பந்து தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு.!

ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடும் போது நெஞ்சில் பந்து தாக்கியதில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் அருகே வன்னிவயல் கிராமத்தை சேர்ந்த பழனி குமார் என்பவரின் மகன் சுபாஷ் குமார். இவர் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

சுபாஷ் குமாருக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுபாஷ் குமாரின் நெஞ்சில் கிரிக்கெட் பந்து பட்டது.

அதனால் மயங்கி விழுந்த அவரை பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே சுபாஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த சிறுவனின் பெற்றோர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். சிறுவனின் மறைவால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.