லண்டனில் இளைஞரை சுற்றி வளைத்து தலையில் தாக்கிய கும்பல்! அடுத்து நடந்த திருட்டு சம்பவம்


லண்டனில் நபர் ஒருவரை தலையில் கத்தியால் தாக்கிய கும்பல் அவரின் கைகடிகாரத்தை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

கிழக்கு லண்டனின் ஹார்ன்சர்ச்சில் தான் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.
அதன்படி காலை வேளையில் கும்பலாக சிலர் 30களில் உள்ள ஆண் ஒருவரை அணுகினார்கள்.

பின்னர் கத்தியால் அவர் தலையில் குத்தி தாக்கிவிட்டு அவரின் கடிகாரத்தை திருடி சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மற்றும் ஆம்புலன்ஸ் அங்கு வந்த நிலையில் காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

லண்டனில் இளைஞரை சுற்றி வளைத்து தலையில் தாக்கிய கும்பல்! அடுத்து நடந்த திருட்டு சம்பவம்

உக்ரைன் போரால் சலுகை! ரஷ்யாவிடம் இருந்து முக்கிய பொருளை வாங்கி குவிக்கும் 2 ஆசிய நாடுகள்

அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது, பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த கத்திகுத்து மற்றும் திருட்டு சம்பவம் தொடர்பில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் எங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.