வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு இந்திய நிவாரண மண்ணெண்ணெய்

இந்திய அரசாங்கத்தினால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணெய் ஊர்காவற்துறையில் நேற்று (28) பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதுதொடர்பான நிகழ்வு ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நடராஜன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
 
கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய் ,கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் , அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ நடராஜன் ஆகியோர் கையளித்தனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.