பிரேசில் நாட்டில் விமான நிலையத்தில் உள்ள தகவல் திரையில் ஆபாச படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரேசில் நாட்டின் மிகப்பெரிய கடற்கரை நகரமான
ரியோ டீ ஜெனிரோ
நகரில், சர்வதேச
விமான நிலையம்
ஒன்று உள்ளது. இது, நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் நேற்று முன்தினம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
அப்போது, விமான நிலையத்தில் விமானங்கள் வருகை குறித்த தகவல்களை அறிவிக்கும் திரையில் திடீரென ஆபாச படங்கள் ஒளிபரப்பாகின. இதனால் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சில பயணிகள் ஆபாச படங்கள் ஓடிய திரையை பார்த்து சிரித்தபடி நகர்ந்து சென்றாலும், பெரும்பாலானோரை இது முகம் சுளிக்க வைத்தது. பலர் தங்கள் கண்களை மூடிக் கொண்டனர். மேலும் தங்கள் குழந்தைகள் திரையை பார்க்கவிடாமல் மறைத்துக் கொண்டனர்.
சர்ச்சில் கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 31 பேர் பலி!
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தின. ஹேக்கர்கள் விமான நிலையத்தின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து விளம்பர திரையில் ஆபாச படங்களை ஒளிபரப்பி இருக்கலாம் என, கூறப்படுகிறது. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.