விவசாயிகள் மானியத் தொகையான 21 ஆயிரம் கோடி ரூபாயை 31 ஆம் தேதி வெளியிடுகிறார் பிரதமர் மோடி

விவசாயிகள் மானியத் தொகையான 21 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி வரும் 31 ஆம் தேதி வெளியிட உள்ளார்.

கிஸான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் நிதி தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதையடுத்து இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

சிம்லாவிலிருந்து வீடியோ காணொலி வாயிலாக பிரதமர் உரையாட உள்ளதாக பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.