இந்தோனேஷியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் மீட்பு… மாயமான 25 பேரை தேடும் பணி தீவிரம்.!

இந்தோனேஷியாவில் 42 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சுலாவேசி மாகாணத்தின் தலைநகரான மகஸ்ஸரில் இருந்து சென்ற படகு எரிபொருள் தீர்ந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடலில் தத்தளித்த 17 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 25 பேரை தேடும் பணியில் இந்தோனேசியா விமானப் படை ஹெலிகாப்டர்களுடன் 2 மோட்டார் படகுகள் மற்றும் மீட்பு படகுகள் ஈடுபட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.