கோவை மாவட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்று சான்றிதழ்.!

கோவை மாவட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஜாதி மதமும் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கே.கே புதூரை சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். இவர் தனது மூன்று வயது மகளை எல்கேஜி சேர்ப்பதற்கு பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது சேர்க்கை விண்ணப்பத்தில் ஜாதியை பற்றி தகவலை குறிப்பிட வில்லை என்பதால் பள்ளி நிர்வாகம் சேர்க்கைக்கு அனுமதி மறுத்துள்ளது.

இதனையடுத்து அவர் வருவாய்த்துறை மூலம் தனது குழந்தைக்கு ஜாதி மதம் இல்லை என்று சான்றிதழை பெற்றுள்ளார்.

மேலும் இனிவரும் காலங்களில் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகைகளும் விண்ணப்பிக்க மாட்டோம் என்று நரேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.