சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து விபத்து.. ஒருவர் பரிதாப பலி..!

டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் வட பகுதியை சேர்ந்தவர் மோகன். ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஆனா இவர் தனது மனைவி சசிகலா, அவரது மகன் மற்றும் மகள் நான்கு குழந்தைகளுடன் ஒரே காரில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

 அப்பொழுது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.