“சித்து மூசா பாதுகாப்புடன் செல்லவில்லை புல்லட் புரூப் காரில் பயணிக்கவில்லை” – காவல்துறை

பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூசேவாலாவுக்கு அளிக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பை அவர் ஏற்கவில்லை. புல்லட் புரூப் காரில் பயணிக்கவில்லை என்று காவல்துறை டிஜிபி வி.கே.பார்வா செய்தியாளர்களிடம் கூறினார்.

பாதுகாப்பு குறைபாடு குறித்த சர்ச்சை எழுந்த நிலையில்அவர் விளக்கம் அளித்தார். 3 துப்பாக்கிகள் மூலமாக 30 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சித்து மூசாவாலாவின் காரைப் பின்தொடர்ந்து சென்ற மர்மக் கார் குறித்த கண்காணிப்பு காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.