திருவள்ளூர்: முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து தாக்குதல் – வைரலாகும் வீடியோ

திருவள்ளூரில் முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து இரும்பு கம்பி மற்றும் கட்டைகளால் பெண்களை தாக்கும் சிசிடிவ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பவருக்கும், கூவம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தாஸின் தரப்பு ஆட்கள் நேற்றிரவு சார்லஸின் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த சார்லஸ் மற்றும் அவரது மனைவி விக்டோரியா மகள் சவிதா மகன் சாருகேஷ் ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
image
இதில் அவரது மனைவி விக்டோரியா மகள் சவிதா ஆகியோர் தலையில் பலத்த காயங்களோடு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சார்லஸின் வீட்டுக்குள் தாஸின் ஆட்கள் புகுந்து தாக்கி பொருட்களை அடித்து நொருக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
image
இந்த சம்பவம் குறித்து சார்லஸின் சகோதரர் சத்தியமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் வீட்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.