மாடல் அழகி தற்கொலை; கோல்கட்டாவில் பரபரப்பு| Dinamalar

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு ‘மாடல்’ அழகி தற்கொலை செய்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் நான்கு மாடல்கள் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.

இங்கு, பெடியடங்கா என்ற இடத்தில் வசித்தவர் சரஸ்வதி தாஸ், 18. அழகுக் கலை நிபுணரான இவர், விளம்பர படங்களுக்கு மாடலிங்கும் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர், கோல்கட்டாவில் கடந்த இரு வாரங்களில் தற்கொலை செய்து கொண்ட நான்காவது மாடல். இது மாடலிங் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

ஏற்கனவே மஞ்சுஷா நியோகி, பிதிஷா மஜும்தர், பல்லவி ஆகிய மாடல்கள் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.