கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு ‘மாடல்’ அழகி தற்கொலை செய்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் நான்கு மாடல்கள் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு, பெடியடங்கா என்ற இடத்தில் வசித்தவர் சரஸ்வதி தாஸ், 18. அழகுக் கலை நிபுணரான இவர், விளம்பர படங்களுக்கு மாடலிங்கும் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர், கோல்கட்டாவில் கடந்த இரு வாரங்களில் தற்கொலை செய்து கொண்ட நான்காவது மாடல். இது மாடலிங் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
ஏற்கனவே மஞ்சுஷா நியோகி, பிதிஷா மஜும்தர், பல்லவி ஆகிய மாடல்கள் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு ‘மாடல்’ அழகி தற்கொலை செய்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் நான்கு மாடல்கள் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.