மாவட்ட அளவிலான செஸ் போட்டி

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு சதுரங்க அகாடமி சார்பாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி இந்து பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்தூர், காரியாபட்டி, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 9, 10,12,15,19 வயது உடையவர்களுக்கு 6 சுற்றுக்களாக போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுப்பொருட்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெறும் 9 மற்றும் 19 வயது உடையவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற பரிந்துரைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.