சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கடிதம் எழுதியுள்ளார். கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது குழுவுக்கு தலைவராக எஸ்.பி.முத்துராமன், உறுப்பினர்களாக நாசர், கரு.பழனியப்பன் ஆகியோரை நியமித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.