வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 3ம் சேத்தியை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி பார்வதி. விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் கீர்த்திகா(21). கடந்த 2018ம் ஆண்டு நிலத்தை விற்று ரஷ்யாவில் மகளை மருத்துவ படிப்பில் சேர்த்துள்ளார். அங்கு 2 ஆண்டுகள் படித்தார். நிதி நெருக்கடியால் மகளை மேற்கொண்டு படிக்க வைக்க முடியவில்லை. படிப்பை தொடர முடியாமல் மனம் உடைந்த நிலையில் இருந்த கீர்த்திகா, நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
