13ம் திருத்தச் சட்டம் இந்த நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது! மகாநாயக்கர்கள் – செய்திகளின் தொகுப்பு (Video)



ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச்சட்டங்கள் நிறைவேற்றப்படக் கூடாது என்று மகாநாயக்கர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ச நேற்று கண்டியில் அஸ்கிரி – மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி தொடர்ந்திருக்க வேண்டும்.

ஏனெனில் 13ம் திருத்தச் சட்டம் இந்த நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. அதைத்தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரமே சாத்தியப்படும் என மகாநாயக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு, 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.