அட்டலுகம சிறுமியின் கொலை: கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணை

அட்டுலுகம பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் பாணந்துறை மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது.

தான் குற்றம் செய்திருப்பதாக அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என பாணந்துறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.