இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கம்மை நோய்- உலக சுகாதார அமைப்பு

லண்டன்:
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயும் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் 71 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதிய பாதிப்புகள் காணப்பட்டாலும், பொதுமக்களுக்கு ஆபத்து குறைவே என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. மேலும் நோய் பாதித்தவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 
மேலும் பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அறிகுறியுடன் கூடிய தொற்று மற்றும் கடுமையான பாதிப்புக்கான ஆபத்து குறையும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.