பொது மக்களுக்கு நிவாரணம்: பிரதமர் ,695 பில்லியன் ரூபா குறை நிரப்புப்பிரேரணையை சபையில் சமர்ப்பிக்க ஏற்பாடு

பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் வகையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க 695 பில்லியன் பெறுமதியான குறை நிரப்பு பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கவுள்ளார்.

சமுர்த்திப் பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், தற்போது எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரண பொதிக்காக இது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

06. பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பித்தல்
 
நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழல் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள அழுத்தங்களை இயலுமான வரையில் குறைப்பதற்காக சமுர்த்திப் பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கத்தால் சலுகைப் பக்கேஜ் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கான செலவுகளை மேற்கொள்வதற்கும், அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 695 பில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் ‘வரவு செலவுத்திட்ட சலுகைச் சேவைகள் மற்றும் திடீர் தேவைகளின் பொறுப்பு’ கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்குவதற்காக பாராளுமன்றத்திற்கு குறைநிரப்பு மதிப்பீட்டை சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.