மணிப்பூரில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி| Dinamalar

இம்பால் : மணிப்பூரில் சமுதாயக் கூடத்தில் குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பீரேன் சிங் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, தவுபால் மாவட்டத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நேற்று காலை குண்டு வெடித்தது. இதில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் மஹதோ, 21, என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தார். காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.