ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் – டி.ஜி.சி.ஏ. உத்தரவு

பழுதான இயந்திரத்தை கொண்டு விமானிகளுக்கு பயிற்சி அளித்ததாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாயை அபராதமாக விமான போக்குவரத்து இயக்குநரகம் விதித்தது.

சிமுலேட்டர் கண்காணிப்பு சோதனையில் பழுதான இயந்திரங்களை கொண்டு போயிங் 737 மேக்ஸ் விமான பைலட்டுகளுக்கு பயிற்சி அளித்தது கண்டுபிடிக்கப்பட்டதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.

கோளாறான இயந்திரத்தில் பயிற்சி பெற்ற 90 விமானிகளை தடை செய்து மீண்டும் பயிற்சி பெற டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டது.  பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாயை அபராதமாக விமான போக்குவரத்து இயக்குநரகம் விதித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.