2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை| Dinamalar

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள குந்திபோரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவர்கள் நேற்று முன் தினம் இரவு அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இருதரப்புக் கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே., ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.