அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் நியமனம்

புதுச்சேரி : புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளராக துரைராஜன் நியமிக்கப் பட்டுள்ளார்.புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிவப்பிரகாசம், கடந்த மார்ச் மாதம் பணி ஓய்வு பெற்றார்.இதனையடுத்து, தமிழ்நாடு அஞ்சல் வட்ட அலுவலகத்தில், உதவி அஞ்சல் துறை தலைவராக (ஊழியர் மற்றும் பயிற்சி), பணியாற்றி வந்த துரைராஜன், புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தின், முதுநிலை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தின் கண்காணிப்பில், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் என மூன்று தலைமை அஞ்சலகங்கள், செஞ்சி முக்கிய அஞ்சலகம், 67 துணை அஞ்சலகங்கள், 324 கிளை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.பொது மக்களுக்கு அஞ்சல் துறை சேவையை சீரிய முறையில் அளிக்க புதுச்சேரி அஞ்சல் கோட்டம் உறுதி அளிக்கிறது. அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்கள் அஞ்சல் சேவை சம்பந்தப்பட்ட புகார்களை, (0413) 2225373, என்ற தொலைபேசி எண்ணிலும், [email protected] என்ற இ-மெயில் அல்லது அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் புதுச்சேரி கோட்டம், புதுச்சேரி 605001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.