அதிகாலை 4 மணிக்கு தமிழகம் வந்த இலங்கை தமிழ்ப்பெண்!


இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் வழியாக இன்று அதிகாலை 4 மணிக்கு 3 பேர் தமிழகம் வந்துள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. எரிபொருள் உயர்வு எரிவாயு மருந்துகள் உள்ளிட்ட பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக இலங்கையில் இருந்து தமிழ்நாடுக்கு படகுகளில் அகதிகளாக வரும் தமிழர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடி தேசிய நெடுஞசாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவில் எதிரே இலங்கை தமிழர்கள் சிலரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மரைன் காவலர்கள் விரைந்தனர்.

அதிகாலை 4 மணிக்கு தமிழகம் வந்த இலங்கை தமிழ்ப்பெண்!

அப்பொழுது அங்கே இருந்த ஒரு பெண், சிறுவன், இளைஞர் என 3 பெயரை மீட்டு காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இலங்கையில் இருந்து படகு மூலம் வெளியேறி ராமேஸ்வரம் வந்ததாக அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

காவல் துறையினர் தொடந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் மண்டபம் அகதிகளின் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பிவைக்க படுவார்கள் என தெரிகிறது.

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை மொத்தம் 83 பேர் தமிழகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.