ரியாத்: சவுதி அரேபியாவில், 38.5 லட்சம் கோடி ரூபாய் செலவில், உலகின் மிக நீண்ட இரட்டை கோபுரங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவசரசராக முகமது பின் சல்மான் உள்ளார். உலகிலேயே மிக நீளமான கட்டடங்கள் கட்ட வேண்டும் என்பது, இவரது விருப்பம். ‘ஸ்கை ஸ்ராப்பர்ஸ்’ என அழைக்கப்படும், வானுயுர கோபுரங்கள், விண்ணை நோக்கி செங்குத்தாக கட்டப்படுவது வழக்கம். ஆனால், சவுதியில் புதிய முயற்சியாக வானுயுர இரட்டை கோபுரத்தை, பூமியில் நீளவாக்கில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரட்டை கோபுரம், ௧,௬௪௦ அடி நீளம் கொண்டதாக இருக்கும். அதாவது, ௩௯ கி.மீட்டர் துாரத்துக்கு இந்த கட்டடம் பரந்து விரிந்திருக்கும். சவுதியின் பிரபலமில்லாத பகுதியில் ௩௮.௫ லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்த இரட்டை கோபுரம் கட்டப்பட உள்ளது. இதில் குடியிருப்புகள், கடைகள், அலுவலகங்கள் இடம் பெற உள்ளன.
ரியாத்: சவுதி அரேபியாவில், 38.5 லட்சம் கோடி ரூபாய் செலவில், உலகின் மிக நீண்ட இரட்டை கோபுரங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவசரசராக முகமது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.