தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 3, 4, 5 ஆகிய நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இன்றும் நாளையும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.