தரையிறங்கமுடியாமல் 15 நிமிடங்களாக லண்டனுக்கு மேலே தவித்த மகாராணியாரின் விமானம்: நடந்தது என்ன?


பிரித்தானிய மகாராணியார் ஓய்வெடுப்பதற்காக ஸ்காட்லாந்திலுள்ள பால்மோரல் எஸ்டேட்டுக்கு சென்றிருந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் லண்டனுக்குப் புறப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தின் அபர்தீன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மகாராணியாரின் விமானம், ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பின் லண்டனை அடைந்துள்ளது.

லண்டன் விமானப்படை விமான தளத்தில் அந்த விமானம் தரையிறங்கவேண்டும்.

தரையிறங்கமுடியாமல் 15 நிமிடங்களாக லண்டனுக்கு மேலே தவித்த மகாராணியாரின் விமானம்: நடந்தது என்ன?

ஆனால், தரையிறங்குவதற்குமுன் திடீரென ஒரு புயல் உருவாக, ஆலங்கட்டி மழை, மின்னல் என தொடர்ச்சியாக பல தடைகள் விமானத்தை தரையிறங்கவிடாமல் தடுக்க, விமானி மீண்டும் விமானத்தை மேலெழுப்ப, விமானம் சுமார் 15 நிமிடங்கள் தெற்கு லண்டனுக்கு மேலேயே சுற்றியுள்ளது.

பிறகு இரண்டாவது முறை விமானி மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. உடனடியாக கார் மூலம் புறப்பட்ட மகாராணியார், பாதுகாப்பாக விண்ட்சர் மாளிகையை சென்றடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள பக்கிங்காம் அரண்மனை வட்டாரம், ஆனால், பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
 

தரையிறங்கமுடியாமல் 15 நிமிடங்களாக லண்டனுக்கு மேலே தவித்த மகாராணியாரின் விமானம்: நடந்தது என்ன?

தரையிறங்கமுடியாமல் 15 நிமிடங்களாக லண்டனுக்கு மேலே தவித்த மகாராணியாரின் விமானம்: நடந்தது என்ன?

Image – thesun



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.