தொழிலாளர் அலுவலகத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி தொழிலாளர் துறை வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை 3ம் தேதி தனியார் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து தொழிலாளர் துறை செயலர் சுந்தரேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:நாளை காலை 9:30 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், புதுச்சேரியில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்ககளில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.இன்ஜினியரிங், டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் டிரைவர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம்.முகாமில் பங்கேற்க வருபவர்கள் தங்களது சுயகுறிப்பு, கல்வி சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.