பணம் கேட்டு மிரட்டிய காதலியின் உறவினர்கள்.. பொய் புகார் அளிப்பதாக கூறியதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!

பெண்ணின் காதலனைய் என்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் திக்விஜய் சிங் பர்மர். அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தெரிய வரவே அந்த பெண்ணின் உறவினர்கள் திக்விஜய் சிங்கை மிரட்டி பணம் பறிக்க முயன்று உள்ளனர்.

ஒருவேளை பணம் தர மறுத்தால் அந்த பெண்ணை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளிப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னிடம் பணமில்லை என கூறியுள்ளார். ஆனால் அதனை கேட்காமல் அவரிடம் பணம் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தன்னிடம் பணமில்லை என ஆடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து அவரின் உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.