புதிய அத்தியாயத்தில் இறங்க இருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிக்கை.!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, நிறைய மக்களுக்கு உதவும் வகையில் புதியதாக ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை பல ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது. 

தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தில் இறங்கும் முயற்சிக்கு மக்கள் ஆதவளிப்பார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கங்குலியின் இந்த சூசகமான அறிக்கை, அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகவில்லை என்று அதன் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.