வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

உரிய நிவாரணத் தொகையை மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திறைசேரிக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

உரிய நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையிலான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்ததன் பின்னர் குறித்த மாவட்டத்திற்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்படும் என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.