அடடே… ஒட்டகத்தை வைத்து ஆற்று மணல் திருட்டு!!

சிவகங்கையில், ஒட்டகத்தை வைத்து ஆற்று மணல் கடத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.

இரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒட்டகத்தைக் கட்டிக் கொண்டு மாட்டு வண்டி ஒன்று வந்தது. இதைப்பார்த்த போலீஸார் மாட்டு வண்டியை நிறுத்தி, அதிலிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் பல்லாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. அவர் சவூதி அரேபியாவில் நீண்ட காலம் வேலைபார்த்து வந்துள்ளார். பிறகு சில மாதங்களுக்குச் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து மாட்டு வண்டியில் ஆற்று மணலை கடத்தி வந்துள்ளார்.

svg sand 1

மணல் பரப்பில் வண்டியை இழக்க மாடு சிரமப்பட்டுள்ளதால், மாட்டிற்குப் பதில் ஒட்டத்தைப் பயன்படுத்த திட்டம்போட்டுள்ளார். எனவே ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தை வாங்கி ஆற்று மணலைக் கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில்தான் சரவணண், ரோந்தின் போது சிக்கியுள்ளார். இதையடுத்து போலீஸார் ஒட்டகத்தையும், மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.