அடுத்தடுத்து தீப்பற்றி எரியும் மின்சார ஸ்கூட்டி.. நெல்லையில் பரபரப்பு சம்பவம்.!

கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனம் திடீரென தீப்பிடித்து எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டி ஒன்று தீபிடித்து எரிந்துள்ளது . கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் ஆசீர் என்பவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவர் சமீபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டி ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதனையடுத்து அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.