அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை.!!

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார்.

அண்ணாமலைக்கு புரிதல் கிடையாது. புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது. பத்திரிக்கையாளர் பக்கத்தையும், தொலைக்காட்சி நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, செந்தில்பாலாஜி 5 கட்சிக்கு மாறியவர்.  காற்றிலிருந்து, நிலக்கரியிலிருந்து விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் செந்தில்பாலாஜி. அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என்று சொல்லி உள்ளார். 

அவர் சொன்னது போலவே எனக்கு பக்குவமாக ஊழல் செய்ய தெரியாது. செந்தில்பாலாஜி கருத்தை முற்றிலுமாக ஏற்கிறேன். அண்ணாமலைக்கு பக்குவமாக ஊழல் செய்ய தெரியாது என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.