இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று முதல் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரத்நாயக்க தெரிவிக்கையில் இன்று 2ஆம் திகதி முதல் எதிர் வரும் 5ஆம் திகதி வரை மீண்டும் மின் துண்டிப்பு இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 2 ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் இரண்டு மணித்தியால மின்துண்டிப்பும் 4 ஆம் திகதி ஒரு மணித்தியால மின் துண்டிப்பும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எனினும் 5 ஆம் திகதி மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.