சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்துக்கு உத்தரப் பிரதேசத்தில் கேளிக்கை வரி விலக்களிப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
அக்சய் குமார் – மனுசி சில்லார் நடித்த வரலாற்றுத் திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், லக்னோவில் படத்தின் சிறப்புக் காட்சியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், அமைச்சர்களும் கண்டுகளித்தனர்.
அப்போது படத்தின் இயக்குநர், நாயகன், நாயகி ஆகியோரும் உடனிருந்தனர்.
படத்தைப் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், எளிய மனிதரும் படத்தைக் கண்டுகளிக்க ஏதுவாகக் கேளிக்கை வரி விலக்கு அளிப்பதாக அறிவித்தார்.