மதுரை: கணவன், மனைவி பிரச்சனையில் குழந்தையை ஒப்படைக்க கோருவதை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. கணவரிடம் சட்டவிரோதமாக தனது மகள் இருப்பதாக பெண் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய கருத்தினை தெரிவித்திருக்கிறது. மகளை மீட்க சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.