காதலை உணர்வதாக சொன்ன பாவ்னி ரெட்டி! உறுதி செய்த பிரபலம்

நடிகை பாவ்னி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். இவரது கணவர் தற்கொலை செய்து இறந்துவிட்டதால் சில காலங்கள் மீடியாவில் வராமல் இருந்தார். அதன்பின் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள்-2வில் அமீருடன் சேர்ந்து நடனமாடி வருகிறார்.

அமீர், பாவ்னி ரெட்டிக்கு புரொபோஸ் செய்த விஷயம் ஊருக்கே தெரிந்தது தான். ஆனால், அதைபற்றியெல்லாம் தெளிவாக விளக்கம் சொல்லாமல் இருவரும் சமாளித்தே வந்தனர். இந்நிலையில், பாவ்னி ரெட்டி கேண்டில் லைட் டின்னரில் ரொமாண்டிக்கான போட்டோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், தான் காதலை உணர்வதாக குறிப்பிட்டுள்ளார். பாவ்னி ரெட்டி காதலில் விழுந்துள்ளதை உறுதி செய்யும் வகையில் தொகுப்பாளினி பிரியங்காவும் அந்த பதிவில் உண்மை என்று கமெண்ட் அடித்துள்ளார்.

கடந்த வார பிக்பாஸ் ஜோடிகள்-2 எபிசோடில் பேசிய பாவ்னி ரெட்டி, தனக்கு அமீரை பிடிக்கும் என்றும், அவர் காதலை ஏற்க தனக்கு டைம் வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு இலைமறை காயாக சில உண்மைகளை ரசிகர்களிடம் யூகிக்க வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.