காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் குமார். இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ஆரேமோகனாபாராவில் உள்ள ஒரு வங்கியில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை இவர் வழக்கம்போல் வங்கியில் பணியில் இருந்தார்.
அப்போது வங்கிக்குள் நுழைந்த பயங்கரவாத கும்பல் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் விஜயகுமாரை நோக்கி சரமாரியாக சுட்டது.
இதில் குண்டு பாய்ந்த அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பா க போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் பண்டிட் ஆசிரியை ஒருவரை மர்மகும்பல் பட்டபகலில் சுட்டுக்கொன்றது. இதன் தொடர்ச்சியாக இன்று அதே பாணியில் வங்கி மேலாளர் கொல்லப்பட்டு உள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து தாக்குதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.