செல்போன் வாங்கி தராததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகுமாரி. இவரது மகள் பாக்கியலட்சுமி அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டுநாட்களுக்கு முன் பாக்கியலட்சுமி தனது தாயாரிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டார்.
இவர் மனமுடைந்த பாக்கியலெட்சுமி அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். அவரின் உடல் மிதந்து வந்ததை கண்ட அக்கம்பக்கதினர் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.