தாஜ்மகால் சர்ச்சையைக் கிளப்புவோர் மீது நடவடிக்கை எடுங்கள்: காவல் நிலையத்தில் ‘முகலாயர் வாரிசு’ புகார்

புதுடெல்லி: தாஜ்மகால் மீது சர்ச்சையை கிளப்புபவர்கள் மீது ஆக்ரா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதை முகலாயர்களின் வாரிசாகத் தன்னைக் கூறும் ஆரீப் யாக்கூப்புத்தீன் என்பவர் நேரில் அளித்துள்ளார்.

“கடந்த சில மாதங்களாக தாஜ்மகால் மீது பல்வேறு வகையிலான சர்ச்சைகள் கிளப்பி விடப்படுன்றன. கீழ்த்தரமானப் புகழ்ச்சி பெறுவதற்காக உலக அதிசயமான தாஜ்மகால் மீது புகார் செய்வதாகவும் கருதப்படுகிறது. இதுபோன்றவர்கள் மீது உத்தரப் பிரதேசப் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி ஆக்ரா காவல்நிலையத்தில் இன்று புகார் செய்யப்பட்டுள்ளது. இதை தன்னை முகலாயர்களின் கடைசி வாரிசாகக் கூறிக்கொள்ளும் ஆரீப் யாக்கூப்புத்தீன் அளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.