வேலூர் கூட்டுறவு வங்கியில் ரூ.97 கோடி மோசடி : பெண் அதிகாரி கைது

வேலூர்

த்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் மகளிர் குழுக்களுக்குக் கடன் வழங்கியதில் ரூ. 97 கோடி மோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரியூரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 38 வயதாகும் இவர், வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி, வேலூர் கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்  .இவர் கடந்த, 2018 – 19ல் குடியாத்தம் கிளையில் மேலாளராக பணியாற்றியபோது, மகளிர் சுய உதவிக் குழுவினருக்குக் கடன் வழங்கியதாக, போலி ஆவணங்கள் தயாரித்து, 97.37 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.

இது குறித்து கூட்டுறவுச் சங்க துணை பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.   இதையொட்டி உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது

இது குறித்து.வணிக குற்றப்பிரிவு காவல்துறை விசாரணையில், உமா மகேஸ்வரி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும், மோசடி செய்த பணத்தில் சென்னை, வேலூர், காட்பாடியில் வீடு, வீட்டு மனை வாங்கியதும் உறுதியானது. நேற்று உமா மகேஸ்வரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.