உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.
அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.38,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.4,810க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து, ரூ.68.50க்கு விற்பனையாகிறது.